Jan 08, 2024
திசைமாறி பயணிக்கும் ‘யுக்திய ஒப்பரேஷன்’!
இலங்கையானது நீதி சம்பந்தமான பிரச்சினைகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடாகும். நீதிகோரி எழுப்பப்படும் கோஷங்கள் எட்டு திக்கிலும் ஒலித்துகொண்டுதான் இருக்கின்றன.. இந்நிலையிலேயே தற்போது பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘யுக்திய’ (நீதி) பற்றியும் பேசப்படுகின்றது. ‘யுக்திய’ என்ற போர்வையில் ஊடக பிரசாரமும், பொலிஸ் நடவடிக்கையும் ஒரே நேரத்தில் நடக்கின்றது. இவ்விரு நடவடிக்கையாலும் மக்களுக்கான நீதி கடுமையாக மீறப்படுவதாகவே நாம் கருதுகின்றோம்.