Oct 21, 2023
‘அதிஉயர்’ சபையை அரசியல் ‘சாக்கடை’ ஆக்க வேண்டாம்!
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே விவகாரமே தேசிய ரீதியில் மட்டுமல்ல தற்போது சர்வதேச மட்டத்திலும் பேசப்படுகின்றது. இலங்கையில் ‘கஞ்சா’ பயிரிடலை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து ஏற்கனவே அரசியல் எதிர்ப்பு புயலில் சிக்கிய டயானா கமகே, அவ்வப்போது சர்ச்சைக்குரிய அறிவிப்புகளை வெளியிடுவதில் முன்னணி அரசியல்வாதியாக வலம்வருகின்றார்.