Dec 13, 2023
அவசர பொதுத்தேர்தலும் வலதுசாரிகளின் அரசியல் எதிர்காலமும்…!
தற்போதைய நிலைவரத்தின் பிரகாரமும், இறுதியாக வெளியான புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆதரவு குறைந்துவருகின்றது. தாண்டவமாடும் பொருளாதாரப் பிரச்சினைகள், மின் கட்டணம் அதிகரிப்பு, வற் வரி அதிகரிப்பால் ஏற்படவுள்ள விலையேற்றம் போன்ற காரணங்களால் 2024 ஆம் ஆண்டிலும் மக்கள் மத்தியில் ஜனாதிபதிக்கு செல்வாக்கு பெருக சாத்தியமில்லை.