தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வை பலவந்தமாக திணிக்க முடியாது.எனவே, மக்களிடம் கருத்துகோரலும் அவசியம். புதிய அரசமைப்பு ஊடாக அதற்கான ஏற்பாடுகள் இடம்பெறும் – என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
அடுத்த பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்கப்பெற்றால் இப்பணியை முன்னெடுப்பது இலகுவாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.
“ தேசிய இனப்பிரச்சினைக்கு தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் தீர்வு காணப்படும். அவ்வாறு தீர்வு காணும்வரை மாகாணசபை முறைமை தொடரும். தேர்தலும் நடத்தப்படும். புதிய அரசமைப்பின் ஊடாகவே இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண முடியும். ஒரு கட்சியால் இதனை செய்ய முடியாது. அனைத்து கட்சிகளின் ஆதரவு அவசியம்.” – எனவும் ஹரினி அமரசூரிய சுட்டிக்காட்டினார்.
“இதுதான் தீர்வு என தமிழ் பேசும் மக்களுக்கு அதனை திணிக்க முடியாது. எனவே, மக்களுடனும் கலந்துரையாட வேண்டும். தீர்வு காணும் கால எல்லை எவ்வாறு அமையும் என்பது மக்கள் எமக்கு வழங்கும் ஆணையிலேயே தங்கியுள்ளது. பொதுத்தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்தால் நல்லது. அதற்கான சாத்தியம் தற்போது நிலவுகின்றது.
அதேபோல அடுத்த தேர்தலில் சம்பிரதாயக் கட்சிகளுக்கு உரிய இடம் கிடைக்காது. நாடாளுமன்ற வியூகம்கூட மாறலாம். எனவே, மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் கிட்டாவிட்டால்கூட பொருத்தமான தரப்புகளின் ஆதரவைப் பெறலாம்.” – எனவும் ஹரினி அமரசூரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!