Jul 02, 2024
அறவழியில் அரசியல் தீர்வு கோரிய சம்பந்தனின் மறைவும் தமிழர்களின் நிலையும்
மிகமுக்கியமான ஒரு காலகட்டத்திலே தமிழர்களுடைய பெரும் தலைவராக இருந்த சம்பந்தன் இனத்தை விட்டுப் பிரிந்திருக்கின்றார். வயது மூப்புக் காரணமாக அவரின் பிரிவு எதிர்பார்க்கப்பட்டதுதான். அண்மைய காலத்தில் இனத்திற்கு சரியான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு அவரது உடல்நிலை இடம் கொடுக்கவில்லை என்பதும் வாஸ்தவம்தான்.