அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். இந்நாட்டில் பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களையும் இணைத்துக்கொண்டு, சிறுபான்மையின மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அடி,முடி கண்டறியப்படும். இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.
பொறுப்புகூறவேண்டியவர்களுக்கும் உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்.
இந்நாட்டில் கொலைக்கலாசாரம், இனவாதம், மதவாதம், அடிப்படைவாதம், பயங்கரவாதத்துக்கு நாம் இடமளிக்கமாட்டோம்.
இந்நாட்டில் பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களையும் இணைத்துக்கொண்டு அரசியல் பிரச்சினைகளுக்கு குறிப்பாக சிங்களம் அல்லாத மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்போம். 13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.” – எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!